செய்திகள்
முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
மோகனூரில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மோகனூர்:
மோகனூர் பகுதிகளில் தாசில்தார் ராஜேஷ் கண்ணா, பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், போலீசார், வருவாய்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் முககவசம் அணியாமல் சென்ற 33 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் வங்கிகள், மருத்துவமனைகள், மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள் போன்ற மக்கள் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணியாமல் வெளியில் வரக்கூடாது என்று எச்சரித்தனர்.
மோகனூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற ஒரு தனியார் டெக்ஸ்டைல்ஸ் வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி பணியாளர்களை அழைத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள், போலீசார் பணியாளர்களை இறக்கிவிட்டதோடு எச்சரித்து வாகனத்தை திருப்பி அனுப்பி வைத்தனர்.