செய்திகள்
மரணம்

ஊருணியில் மூழ்கி கொத்தனார் பலி

Published On 2021-01-27 12:30 GMT   |   Update On 2021-01-27 12:30 GMT
ஊருணியில் மூழ்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள இடையர் வலசை பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 34). கொத்தனார் வேலை செய்து வந்தார். இடையர்வலசை ஊருணி பகுதி கரையில் அவரின் உடைகள் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து அங்கு சென்று உறவினர்கள் தேடிபார்த்தனர். அப்போது ஊருணிக்குள் மூழ்கி இறந்த நிலையில் வீரபாண்டியன் உடலை கைப்பற்றினர். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News