செய்திகள்
காபூல்: மசூதி அருகே பயங்கர குண்டு வெடிப்பு- பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் மசூதி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் உள்ள ஒரு மசூதியின் வெளியே திடீரென பயங்கர குண்டு வெடித்தது. இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மசூதிக்குள் மக்கள் நுழையும் இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.