செய்திகள்

ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தல் அதிமுக-திமுக வேட்பாளர்களாக அண்ணன், தம்பி போட்டி

Published On 2019-03-18 05:14 GMT   |   Update On 2019-03-18 05:20 GMT
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க. சார்பில் அண்ணன்-தம்பி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். #ADMK #DMK

ஆண்டிப்பட்டி:

பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தம்பியும், தி.மு.க. சார்பில் அவரது உடன் பிறந்த அண்ணனும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் லோகிராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 1987-ம் ஆண்டு முதல் கட்சியில் பணியாற்றி வரும் இவர் கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், யூனியன் தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார்.

இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் அவரது உடன் பிறந்த அண்ணன் மகாராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த 1973-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். ஆண்டிப்பட்டி யூனியன் பெருந்தலைவராகவும் இருந்துள்ளார்.

தமிழகத்தில் வேறு எந்த தொகுதியிலும் இல்லாத புதுமையாக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதி.மு.க. - தி.மு.க. சார்பில் எதிர்எதிர் அணிகளில் அண்ணன், தம்பி களத்தில் மோதுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #DMK

Tags:    

Similar News