உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய காட்சி.

பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் தி.மு..க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

Published On 2022-05-05 05:51 GMT   |   Update On 2022-05-05 05:51 GMT
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல. பத்மநாபன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.
பல்லடம்:

தமிழகத்தில் கோடை வெப்பத்தை முன்னிட்டு பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில், தண்ணீர் பந்தல், நீர் மோர்பந்தல், திறக்க தி.மு.கவினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி, சின்னிய கவுண்டம்பாளையத்தில், பணிக்கம்பட்டி ஊராட்சி தி.மு.க .சார்பில்,நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நீர் மோர் பந்தலை, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல. பத்மநாபன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

இதில் தி.மு.க .பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், துணைச் சேர்மன் பாலசுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், பொறியாளர் அணி சிற்பி செல்வராஜ், பொறுப்புக்குழு உறுப்பினர் திருமூர்த்தி கலந்து கொண்டனர்.

மேலும் பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரோஜாமணி ஈஸ்வரன், துணைத்தலைவர் முத்துலட்சுமி உதயகுமார், 5 வது வார்டு உறுப்பினர்  தனபால், பொறுப்புக் குழு சிவகுமார், மகளிரணி பானுமதி, ராஜேஸ்வரி,  மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News