செய்திகள்
ஆன்லைனில் பாஸ்டேக் அட்டை-அதிகாரிகள் எச்சரிக்கை
பாஸ்டேக் மின்னணு அட்டையை வாகன முன்பக்க கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால் சுங்கச்சாவடிகளை கடக்கும் போது அங்குள்ள கருவி வாயிலாக சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து கழித்து கொள்ளப்படும்.
திருப்பூர்:
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க ‘பாஸ்டேக்‘ திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான மின்னணு அட்டை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் www.ihmcl.co.in என்ற இணையதளம் மற்றும் my Fastag செயலி மூலம் பெறலாம்.கார், இலகு ரக வாகனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டேக் மின்னணு அட்டையை வாகன முன்பக்க கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால் சுங்கச்சாவடிகளை கடக்கும் போது அங்குள்ள கருவி வாயிலாக சுங்க கட்டணம், வங்கி கணக்கில் இருந்து கழித்து கொள்ளப்படும். இதுதொடர்பான குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வந்து சேரும்.
இந்நிலையில் ‘ஆன்லைன்’ வாயிலாக பாஸ்டேக்அட்டை வழங்கப்படுவதாக கூறப்படும் விளம்பரங்களை நம்பி பலர் ஆன்லைனில் பணம் கட்டி ஏமாறுகின்றனர். ஆன்லைன் வாயிலாக யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளதுடன், சந்தேகம் இருப்பின் 1033 என்ற அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், etc.nodal@ihmcl.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என திருப்பூர் மாவட்ட வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.