செய்திகள்
கடையம் அருகே இளம்பெண் தர்ணா போராட்டம்
கடையம் அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் டேவிட் ராஜா. இவருடைய மனைவி சுகந்தி (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி சுகந்தி நேற்று டேவிட் ராஜா வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.