செய்திகள்
கோப்புபடம்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி - 370 பேருக்கு தொற்று உறுதி

Published On 2021-06-06 13:12 GMT   |   Update On 2021-06-06 13:12 GMT
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர். மாவட்டத்தில் 370 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா பரிசோதனை முகாம்களும் மாவட்டம் முழுவதும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் புதிதாக 370 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,871 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 305 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மேலும் 370 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2,932 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 140 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News