செய்திகள்
கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை - வழிப்பறி: 2 வாலிபர் கைது

Published On 2019-11-02 08:17 GMT   |   Update On 2019-11-02 08:17 GMT
திருச்சியில் கஞ்சா விற்பனை, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் பகுதியில் அதிகமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலறிந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் பொதுக்கழிப்பிடம் அருகில் சந்தேகத்திற்குரிய வாலிபர் ஒருவர் இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்து பார்த்தபோது அவரிடமிருந்து 1 கிலோ மற்றும் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் திருச்சி பாலக்கரை சங்கிலி யாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாரதிதாசன் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல் திருச்சி உறையூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் சிவா (39). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் இவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த சிவா அருகில் உள்ள கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு சிவா தன்னிடம் பணத்தை பிடுங்கிய நபரை போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

அவரைப்பிடித்து விசாரித்ததில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த தேசிகன் என்பவரின் மகன் பாலமுருகன் (25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News