ஆன்மிகம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளின் ஒருவராக சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின்போது 5 கால சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அப்போது சுவாமிக்கு பால், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின்போது 5 கால சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அப்போது சுவாமிக்கு பால், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.