செய்திகள்
கோப்புபடம்

திருவாரூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-22 07:05 GMT   |   Update On 2020-11-22 07:05 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:

மின்வாரியத்தில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கள உதவியாளராக பணி நியமன உத்தரவு வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்கிட வேண்டும்.

ஆரம்ப கட்ட பதவி இடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். திட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜாராமன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் செயலாளர் குமார், அமைப்பின் திட்ட துணைத்தலைவர் ராமசாமி, திட்ட செயலாளர் ராஜேந்திரன், கோட்ட செயலாளர் தமிழரசன், கோட்ட தலைவர் முரளிதரன், சி.ஐ.டி.யூ. மாவட்டசெயலாளர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News