செய்திகள்
கைது

துறையூர் அருகே பார் காவலாளியை காரில் கடத்தி நகை, பணம் பறிப்பு - 2 பேர் கைது

Published On 2021-06-17 17:44 GMT   |   Update On 2021-06-17 17:44 GMT
துறையூர் அருகே பார் காவலாளியை காரில் கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில் 2 பேைர போலீசார் கைது செய்தனர்.
துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே பாரில் காவலாளியாக மகேந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, கடையை திறந்து மதுபாட்டில்களை எடுத்து தரும்படி மகேந்திரனை மிரட்டி உள்ளனர். அவா் மறுக்கவே, அவரை காரில் ஏற்றி கடத்திச்சென்று அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரம், 2 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்தனர்.

பின்னர் அவரை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். உடனே அவர் அங்கிருந்து தப்பி வந்து துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவரை கடத்தி சென்று பணம், நகையை பறித்தது துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த அருண் (வயது 31), செங்காட்டுபட்டியை சேர்ந்த ஆனந்த் (27) மற்றும் மதுபாலன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அருண், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மதுபாலனை தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News