செய்திகள்
கைது

பாபநாசம் அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 வாலிபர்கள் கைது

Published On 2019-11-10 12:18 GMT   |   Update On 2019-11-10 12:18 GMT
பாபநாசம் அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் மணியரசன் (வயது 22), மணிகண்டன் (22), மணிவண்ணன் (25), திருக்கருகாவூர் பாலாஜி (42), தஞ்சாவூர் ராம்குமார் (23), இவர்கள் 5 பேரும் பண்டாரவாடை ரெயில்வே கேட் அருகில் பாபநாசம் பகுதியில் வருவோர், போவோரிடம் கூட்டு கொள்ளையடிப்பதற்காக சதித்திட்டம் தீட்டிக் கொண்டு உருட்டுக் கட்டையுடன் மறைந்து இருந்தனர்.

இதுபற்றி தெரியவந்ததும் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணியரசன், மணிகண்டன், மணிவண்ணன், பாலாஜி, ராம்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிவக்குமார் 5 பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் 5 வாலிபர்களும் திருச்சி மத்திய சிறை சாலையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News