செய்திகள்
விபத்து பலி

உத்தனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2021-02-22 03:18 GMT   |   Update On 2021-02-22 03:18 GMT
உத்தனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள தேவசானப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பா (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சாமனப்பள்ளிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். கனிந்தூர் பிரிவு சாலை அருகே வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் முனியப்பா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News