செய்திகள்
கோப்புபடம்

கடலூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-22 06:34 GMT   |   Update On 2020-11-22 06:34 GMT
தனியார் துறையில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்;

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். ஊனத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 

தனியார் துறையில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News