ஆன்மிகம்
இஞ்சிமேடு ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில்

27 நட்சத்திர தோஷங்கள் நீங்கும் திருத்தலம்

Published On 2021-10-18 06:03 GMT   |   Update On 2021-10-18 06:03 GMT
இஞ்சிமேடு ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.

பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.

பிரதிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம்.

பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.

சென்னையில் இருந்து 148, 208, 422, 341, 130, 247 காஞ்சீபுரத்திலிருந்து மேல்மலையனூர் செல்லும் வழி, வந்த வாசி-பெங்களூரு அரசு பஸ்சில் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.
Tags:    

Similar News