செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பெட்டிக்கடைகாரர் குண்டர் சட்டத்தில் கைது
தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பெட்டிக்கடைகாரரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வல்லம்:
தஞ்சை பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வீட்டின் அருகே குமரேசன் (வயது 54) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சிறுமியின் பெற்றோர் அவ்வப்போது அந்த கடைக்கு சிறுமியை அனுப்பி சாமான்கள் வாங்கி வர சொல்லி உள்ளனர்.
இந்நிலையில் சிறுமி சாமான்கள் வாங்க கடைக்கு சென்ற போது குமரேசன் சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர தஞ்சை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் உதவியை நாடி உள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் வந்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
சிறுமி நடந்த சம்பவங்களை கூறி உள்ளார். அதன்பேரில் சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிளிபிரியா பரிந்துரையின் பேரில், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் முருகேசனை வல்லம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி குண்டர் சட்டத்தில் கைது செய்து அதன் நகலை மத்திய சிறையில் வழங்கினார்.
தஞ்சை பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வீட்டின் அருகே குமரேசன் (வயது 54) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சிறுமியின் பெற்றோர் அவ்வப்போது அந்த கடைக்கு சிறுமியை அனுப்பி சாமான்கள் வாங்கி வர சொல்லி உள்ளனர்.
இந்நிலையில் சிறுமி சாமான்கள் வாங்க கடைக்கு சென்ற போது குமரேசன் சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர தஞ்சை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் உதவியை நாடி உள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் வந்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
சிறுமி நடந்த சம்பவங்களை கூறி உள்ளார். அதன்பேரில் சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிளிபிரியா பரிந்துரையின் பேரில், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் முருகேசனை வல்லம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி குண்டர் சட்டத்தில் கைது செய்து அதன் நகலை மத்திய சிறையில் வழங்கினார்.