வழிபாடு
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழாவை முன்னிட்டு பால் கம்பம் நடப்பட்டது

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழாவை முன்னிட்டு பால் கம்பம் நடப்பட்டது

Published On 2022-04-13 04:38 GMT   |   Update On 2022-04-13 04:38 GMT
கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை யொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ் சவுந் தரராஜன், துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் தேவகி கார்த்திகேயன், ஆட்டோ மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 14-ந் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News