உள்ளூர் செய்திகள்
சுடுகாட்டு பாதை வேண்டி கிராம மக்கள் சாலை மறியல் பிணத்தை ரோட்டில் வைத்து போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சுடுகாட்டு பாதை வேண்டி கிராம மக்கள் பிணத்தை ரோட்டில் வைத்து போராட்டம் நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள கமலாபுரம் பிரிவு சாலையில் 350க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய ஊருக்கு வெளியே உள்ள புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை கந்தன் என்பவர் பாதையை இரும்பு வேலி அமைத்து அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போல¦சார் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று உடல்நல குறைவாக இறந்த பன்னீர் என்பவரின் உடலை அடக்கம் செய்ய கந்தன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 200&க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பிணத்தை ரோட்டில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ, மத்தூர் இன்ஸ்பெக்டர் முருகன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.