லைஃப்ஸ்டைல்
மிருதுவான சப்பாத்தி செய்யனுமா?

மிருதுவான சப்பாத்தி செய்யனுமா? அப்போ இப்படி டிரை பண்ணுங்க..

Published On 2021-02-04 05:31 GMT   |   Update On 2021-02-04 05:31 GMT
கோதுமை மாவில் செய்கின்ற சப்பாத்தியை தினமும் இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் உடம்பில் சர்க்கரையின் அளவை சீர்செய்யலாம். சரி வாங்க சப்பாத்தியை எப்படி சாஃப்டாக செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு -1 கப்
மைதா மாவு -2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
வடித்த கஞ்சி தண்ணீர் -தேவையான அளவு

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, 2 ஸ்பூன் மைதாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

சப்பாத்தி சாஃப்டாக இருக்க வேண்டும் என்றால் வடித்த கஞ்சி தண்ணீரை சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெயை சேர்த்து கொள்ளலாம்.

பிசைந்த மாவின் மேல் ஈரத்துணியை கொண்டு மூடி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்த பிறகு மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு எடுத்தால் சப்பாத்தி ரெடி....

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News