செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 149 பேர் மீது வழக்கு

Published On 2020-11-21 08:59 GMT   |   Update On 2020-11-21 08:59 GMT
நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடிய 149 பேர் மீதும், பொது இடங்களில் எச்சில் துப்பியதாக இருவர் மீதும் என 151 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 நாமக்கல்:

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் நடமாடிய 149 பேர் மீதும், பொது இடங்களில் எச்சில் துப்பியதாக இருவர் மீதும் என 151 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30,800 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மட்டும் 17 இடங்களில் முககவசம் அணியாமல் நடமாடி வந்த 230 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கொரோனா விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.
Tags:    

Similar News