செய்திகள்
தற்கொலை

ஓசூரில் 2 பேர் தற்கொலை

Published On 2021-11-23 09:50 GMT   |   Update On 2021-11-23 09:50 GMT
ஓசூரில் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் தொரப்பள்ளி அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 20). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், பெற்றோருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நவீன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (53). இவர், பேன்சி ஸ்டோர் வைத்து இருந்தார். இவர் கடன் பிரச்சினை காரணமாக விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தகுமார் இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News