செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையம்

சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை தவிர்த்த வடமாநில தொழிலாளர்கள்

Published On 2021-06-09 09:54 GMT   |   Update On 2021-06-09 12:28 GMT
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், அரியானா உள்ளிட்ட வடமாநிலத்தவர் 3 லட்சம் பேர் திருப்பூரில் தங்கி பணிபுரிகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூரில் பனியன் தொழில் சார்ந்த வேலை வாய்ப்பு குவிந்து கிடப்பதால் பிற மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் வேலை தேடி வருகின்றனர். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், அரியானா உள்ளிட்ட வடமாநிலத்தவர் 3 லட்சம் பேர் திருப்பூரில் தங்கி பணிபுரிகின்றனர். புதிதாக தொழில் வாய்ப்பு தேடி தினமும் ஆயிரம் பேர் வரை திருப்பூருக்கு வந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக 500 பேர் வரை மட்டும் வருகின்றனர். அதே நேரம் தினமும் ஆயிரம் பேர் வரை சொந்த மாநிலங்களுக்கு பயணித்த வண்ணம் இருந்தனர்.

இதனிடையே தமிழகத்தில் 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததால்  பனியன் நிறுவனங்கள் இயங்கவில்லை. இதனால் வடமாநிலத்தவர் பலர் டிக்கெட் முன்பதிவு செய்து சொந்த ஊர் சென்று வர திட்டமிட்டனர். தற்போது ஊரடங்கு தளர்வால் 10 சதவீத பணியாளர்களுடன் பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கியுள்ளது.

வரும் நாட்களில் கூடுதல் ஊழியர்களுடன் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் வடமாநிலத்தவர்கள் பலர் திருப்பூரிலேயே தங்க தொடங்கியுள்ளனர். இதனால் திருப்பூர் ரெயில் நிலையம் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. முன்பதிவு கவுண்டர்களில் கூட்டம் குறைவாகவே உள்ளது.
Tags:    

Similar News