செய்திகள்
விபத்து

சாத்தூரில் தனியார் பஸ் மோதி முதியவர் பலி

Published On 2020-09-13 08:11 GMT   |   Update On 2020-09-13 08:11 GMT
சாத்தூரில் இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி:

சாத்தூர் கீழ ஒட்டம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 63). இவர் நேற்று முன்தினம் சிவகாசி-சாத்தூர் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று, அய்யனார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அய்யனார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். 

இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் மாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News