ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன்

அம்மை - கண் நோய் தீர்க்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்

Published On 2021-09-08 06:16 GMT   |   Update On 2021-09-08 06:16 GMT
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மை மண்டபத்தில் தங்கி அம்மனை மனமுருகி வேண்டி கொள்வர்.
புன்னைநல்லூர் மாரியம்மனின் மகிமைகளை சொல்லி தெரியவேண்டியதில்லை. மிகவும் சக்தி வாய்ந்தவள். தீராத வியாதிகளை தீர்த்து வைப்பவள். கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் மாரியம்மனை மனமருகி வழிப்பட்டால் கண் பார்வை தெளிவுபெற்று செல்கின்றனர். ஒருமுறை ஆங்கிலேய துரை ஒருவர் அகம்பாவத்தால் மாரியம்மனை பற்றி அலட்சியமாக பேசினார்.

அடுத்த நொடியிலேயே அவர் உடல் முழுவதும் அம்மை நோய் ஏற்பட்டு பார்வை பறிபோனது. பின்னர் தன் தவறை உணர்ந்து அம்மனிடம் சரணடைந்து மன்னிக்குமாறு வேண்ட, நோய் குணமாகி பார்வை மீண்டும் கிடைத்தது. இதேப்போல் பல்வேறு சம்பவங்களை கூறலாம்.

வயிற்றுவலியால் துடிப்பவர்கள் அம்மனின் அருளால் குணம் பெறுவது வாடிக்கை. விபத்தில் சிக்கி மருத்துவர்களாகல் கைவிடப்பட்ட நிலையில் இருந்தவர்களை கூட அம்மன் காப்பாற்றியிருக்கிறார். இதற்கு உதாரணமாக, விபத்தில் சிக்கி மிக மிக ஆபத்தான நிலையில் இருந்தவரை காத்து அருள் செய்ய வேண்டி கண்ணீர் பெருக அவரது மனைவி மாரியம்மனிடம் வேண்டினார். அதன் பயனாக அவரை மாரியம்மன் காப்பாற்றினார் என்பது அனைவரும் நேரில் கண்ட உண்மையாகும்.

இதேப்போல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலில் உள்ள அம்மை மண்டபத்தில் தங்கி அம்மனை மனமுருகி வேண்டி கொள்வர். அதன் பின்னர் அம்மை நோய் முற்றிலும் குணமாகி விடும் என்பது அனுபவப் பூர்வமான உண்மையாகும்.

கன்னிபெண்கள் அம்மனுக்கு திருமாங்கல்யம் காணிக்கையாக்குவதாக வேண்டிகொள்ள அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. தன்னை மனமுருகி வேண்டி கொள்ளும் பக்தர்களை அம்மன் ஒருபோதும் கைவிட்டதில்லை.
Tags:    

Similar News