செய்திகள்
விபத்து

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி

Published On 2019-10-17 02:33 GMT   |   Update On 2019-10-17 02:33 GMT
சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பேருந்து விபத்தில் உயிரிழந்தனர்.
துபாய்:

சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. மதினா அருகே பேருந்து விபத்தில் சிக்கியதில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்.

ஹஜ்ரா சாலையில் மற்றொரு வாகனத்துடன் பேருந்து மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News