செய்திகள்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6770 பேருக்கு கொரோனா: 58 பேர் பலி
ஆந்திராவில் 85,637 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,492 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6770 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை அம்மாநிலத்தில் 18,09,844 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17,12,267 பேர் குணமடைந்துள்ளனர். 11,940 பேர் உயிரிழந்துள்ளனர். 85,637 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.