செய்திகள்
டாஸ்மாக்

தஞ்சையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் - கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-01-14 08:43 GMT   |   Update On 2020-01-14 08:43 GMT
தஞ்சை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் ஆகிய 2 நாட்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வரும் 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுபான பார்கள் மற்றும் தனியார் விடுதியில் உள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

இதேபோல் 26-ம் தேதி வரும் குடியரசு தினத்தையொட்டியும் அரசு டாஸ்மாக் கடை, மதுபான கடைகள் மூட வேண்டும். விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News