ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடக்கம்
ஸ்ரீ-சிலந்தி, காள-நாகம், ஹஸ்தி-யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ விக்ரகங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தென்கயிலாயமாக கருதப்படுகிறது. கோவிலில் 5 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு ‘ஸ்ரீ’ என்னும் சிலந்தி, ‘காள’ என்னும் நாகம், ‘ஹஸ்தி’ என்னும் யானை மற்றும் பரத்வாஜ் முனிவர் உற்சவ விக்ரகங்கள் வைக்கப்பட்டது. கலச ஸ்தாபனம், கலச பூஜை, புண்யாவதனம், சிறப்புப்பூஜைகள் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீ-சிலந்தி, காள-நாகம், ஹஸ்தி-யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ விக்ரகங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர். பவித்ரோற்சவத்தில் கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீ-சிலந்தி, காள-நாகம், ஹஸ்தி-யானை மற்றும் பரத்வாஜ் முனிவரின் உற்சவ விக்ரகங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர். பவித்ரோற்சவத்தில் கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.