செய்திகள்
கோப்புபடம்

குழந்தையின் காதுகுத்து விழாவுக்கு கணவர் வராததால் விரக்தி - பெண் டாக்டர் தற்கொலை

Published On 2021-09-20 10:23 GMT   |   Update On 2021-09-20 10:23 GMT
திருச்சி அருகே குழந்தையின் காதுகுத்து விழாவுக்கு கணவர் வராததால் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி:

திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை சாலை பன்னீர்செல்வம் தெரு பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 36). டாக்டரான இவர் தொட்டியத்தில் தனியாக ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சஞ்சினி (30). இவரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் படிப்பை முடித்து விட்டு அங்கேயே பணியாற்றி வந்தார்.

இந்த தம்பதியருக்கு கடந்த 2018-ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஜஷ்ணு என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. மகிழ்ச்சியுடன் தொடங்கிய தம்பதிக்கு மண வாழ்க்கையில் பல்வேறு மனக்கசப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் சமீபத்தில் கணவன்-மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் அவர்கள் மண வாழ்க்கையில் நிம்மதியின்றி இருந்துள்ளனர்.

இதற்கிடையே சஞ்சினி தனது மகனுக்கு நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் உறவினர்கள் அனைவரையும் அழைத்து மொட்டை அடித்து காதுகுத்து விழாவை நடத்தினார். இதில் அவரின் உறவினர்கள் மட்டுமின்றி நண்பர்கள், தோழிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கணவர் மட்டும் பங்கேற்கவில்லை.

இதையடுத்து விழாவிற்கு வந்தவர்களின் சிலர், சஞ்சினியிடம் குழந்தையின் தந்தை எங்கே? என கேட்ட னர். இது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது. பின்னர் விழா முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். குழந்தையுடன் வீடு திரும்பிய சஞ்சினி ஒருவித இறுக்கத்தில் இருந்தார்.

பின்னர் நள்ளிரவு சுப்பிரமணியபுரம் வீட்டில் படுக்கை அறையில் பேனில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது பற்றி கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினையில் பெண் டாக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News