ஆன்மிகம்
வீட்டில் பூஜை

சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட வேண்டிய கடவுள்

Published On 2021-02-13 08:13 GMT   |   Update On 2021-02-13 08:13 GMT
ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாட்களில் எந்த இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாளில் நாம் சிவாலயத்திற்குச் சென்று எள் தீபத்தை சனீஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம். அத்துடன் ‘சனி பிடிக்காத தெய்வம்’ என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமானையும் விடாது வழிபட்டு வருவோம்.

எல்லா மாதங்களையும் விட, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அன்றைய தினங்களில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவிகின்றது. ‘புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால் விஷ்ணுவை ‘புருஷோத் தமன்’ என்றழைக்கிறார்கள். அவனது அவதாரத்தில் ராமாவதாரம் முக்கியமாகக் கருதப்படுகின்றது.

அந்த ராமாயணத்தை வீடுகளிலும், ஆலயங்களிலும் புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். இங்ஙனம், ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட் டவர்கள் ஆகியோருக்கு ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது.

பூமகளின் அருகிருக்கும் விஷ்ணுவை நோக்கி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.
Tags:    

Similar News