கிறித்தவம்
புனித அந்தோணியார்

பாபநாசத்தில் புனித அந்தோணியார் தேர்பவனி

Published On 2022-02-18 03:56 GMT   |   Update On 2022-02-18 03:56 GMT
பாபநாசம் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இரவு தேர்பவனி நடந்தது. இதில் புனித அந்தோணியார் ஆலய நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
பாபநாசம் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது. விழாவை பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தின் பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இரவு தேர்பவனி நடந்தது.

இதில் புனித அந்தோணியார் ஆலய நிர்வாகிகள், இளைஞர் பேரவையினர், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News