ஆன்மிகம்
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்தது

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்தது

Published On 2021-10-11 07:20 GMT   |   Update On 2021-10-11 07:20 GMT
கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், மூலவர் ஏழுமலையானுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் அணிவிக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை கருட சேவை நடக்கிறது. கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், மூலவர் ஏழுமலையானுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் அணிவிக்கப்படும்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் நேற்று திருமலைக்கு வந்தன. முன்னதாக திருமலையில் பேடிஆஞ்சநேயர் கோவிலில் அருகில் உள்ள பெரியஜீயர் சுவாமிகள் மடத்துக்கு மாலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு வைத்து ஆண்டாள் சூடிய மாலைகளுக்கு பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள் தலைமையில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழக அமைச்சர் சேகர்பாபு, ஏழுமலையான் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சேர்மன் ரவிச்சந்திரன், அணைக்கட்டு தொகுதி ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் பெரியஜீயர் சுவாமிகள் மடத்தில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு சென்று மூலவரிடம் சமர்ப்பணம் செய்தனர்.
Tags:    

Similar News