செய்திகள்
தாக்குதல்

சுவாமிமலை அருகே இடப்பிரச்சினையில் விவசாயிக்கு அடி- உதை

Published On 2019-11-22 16:11 GMT   |   Update On 2019-11-22 16:11 GMT
சுவாமிமலை அருகே இடம் சம்பந்தமாக முன் விரோத தகராறில் விவசாயியை தாக்கிய கணவன்-மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பயம் கோவில் மடவிளாகம் பகுதியில் வசிப்பவர் ராமசாமி (வயது 63),விவசாயி. இவருக்கும் பக்கத்தில் வசிக்கும் விவசாயி மகாலிங்கத்துக்கும்(48) இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் மகாலிங்கம் அவரது மனைவி அமுதா (35) ஆகிய இருவரும் சேர்ந்து விவசாயி ராமசாமியை அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து படுகாயம் அடைந்த ராமசாமி உடனடி யாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமசாமியை அடித்து உதைத்த மகாலிங்கத்தை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள அமுதாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News