செய்திகள்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லி:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து கவர்னர் பேச உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர் விடுதலை குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பற்றியும் பிரதமரிடம் கவர்னர் விளக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை செயலாளரையும் சந்திக்க கவர்னர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.