செய்திகள்
மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்

Published On 2020-07-30 13:04 GMT   |   Update On 2020-07-30 13:04 GMT
ஆற்காடு, வாலாஜா தாலுகா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு தாலுகாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வாலாஜா தாலுகாவில் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முகாம்கள் நடைபெறும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஆற்காடு தாலுகாவில் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வாலாஜா தாலுகாவில் 5-ந்தேதி (புதன்கிழமை) வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெறும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News