உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

புளியங்குடியில் இடத்தகராறில் காண்டிராக்டர் கொலை- 3 பேர் கைது

Published On 2022-05-05 10:25 GMT   |   Update On 2022-05-05 10:27 GMT
புளியங்குடி காண்டிராக்டர் கொலையில் அண்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள கீழப்புதூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது. 

இவர் காற்றாலையில் காண்டிராக்ட் முறையில் மின்கம்பம் அமைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் கர்நாடாகா மாநிலம் பெங்களூரிவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சுரேஷ் விடுமுறையில் புளியங்குடி வந்தார். இவருக்கும் இவரது உறவினர் குமார் என்பவருக்கும் இடையே இடம் வாங்குவது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று மாலை இடத்தகராறு தொடர்பாக சுரேசுக்கும், அவரது அண்ணன் வெள்ளத்துரை, அவரது மனைவி அமுதா, அவரது மகன் வசந்தகுமார் மற்றும் அமுதாவின் சகோதரர் குமார் என்பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

 தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்தவர்கள் சுரேசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக புளியங்குடி ேபாலீசார் விசாரணை நடத்தி 
வெள்ளத்துரை, வசந்தகுமார், குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News