செய்திகள்
கெலமங்கலம் அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
கெலமங்கலம் அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள டி.தம்மண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது29), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சேகர் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சேகர் தனது ஆதரவாளர்களுடன் மோகனை தாக்கினர். இது தொடர்பாக கெலமங்கலம் போலீசில் மோகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர், சிவா (25) அக்கொண்டப்பள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.