ஆன்மிகம்
இயேசு

இயேசுவின் தாழ்மை குணம்

Published On 2021-03-10 07:46 GMT   |   Update On 2021-03-10 07:46 GMT
ஏசுவும் தன் பிதாவின் சித்தத்தின் படியே உலகத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து பலியாக வேண்டும் என்று தெரிந்தும் கூட இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்.
மனத்தாழ்யை அணிந்து கொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1 பேதுரு 5:5) பெருமையுடைய வன் எனக்கு எல்லாம் தெரியும். ஒருவரும் என்க்கு போதிக்க வேண்டியதில்லை என்று எல்லாவற்றலும் எதிர்த்து நிற்பான். அவனிடத்திலிருந்து கோபம்,எரிச்சல், பேராசை, பொறமை என்ற துர்குணங்கள் தோன்றும். நா செய்வது எரியென்று கூறுவான். அவர்கள் செயல்களோ கொந்தளிக்கும் கடலைபோல் காணப்படும். ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்தி பெருமை கொண்ட போது அவன் விழுந்தான். அபிஷேகத்தையும் தேவ பாதுகாப்பையும் இழந்தான். தன் ஆயுதத்தால் மரித்து போனான். பெருமைஹயுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தாழ்மை என்பது ஓ இளைப்பாறுதலுக்கான ஜீவிதம், தாழ்மையுள்ள ஒரு மனிதன் அவமானப்படும் போதும், நிந்திக்கப்படும்போதும், துண்பறுத்தப்படும் போதும், தன் உணர்வால் அவன் மனதை புண்படுத்தமுடியாது. ஏனென்றால் அவன் தாழ்மையின் சுபாவத்தை அணிந்திருக்கிறான். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும்கிருபையும் அளிக்கிறார்.

தாழ்மையுள்ளவன் ஒருபோதும் இடறல் அடைவதில்லை. தாழ்மை இளைப்பாறுதலான ஜீவிதம். பரிசுத்தமான வாழ்க்கை, தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளை பேசுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதையும் தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்க செய்கிறார்.

இதே போல் தான் ஏசுவும் தன் பிதாவின் சித்தத்தின் படியே உலகத்தின் பாவத்தை எல்லாம் சிலுவையில் சுமந்து பலியாக வேண்டும் என்று தெரிந்தும் கூட இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். பிதா அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார் என்று நாம் வேதத்தில் வாகிக்கிறோம்.

எனவே தேவ பிள்ளைகளே இந்த கவக்காலத்தில் சிலுவைபாடுகளை நாம் நினைவுகூரும் வேளையில் நாம் பெருமை உள்ளவர்களாய் இல்லாமல் தாழ்மையுள்ளவர்களைய் காணப்படதேவன் தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசிர்வாதிப்பாராக ஆமென்.

சகோ.அல்போன்ஸ், பல்லடம்.
Tags:    

Similar News