செய்திகள்
சீமான்

தேர்தல் விதிமுறை மீறல் - சீமான், 7 வேட்பாளர்கள் உள்பட 450 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2021-03-21 22:43 GMT   |   Update On 2021-03-21 22:51 GMT
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விருதுநகர்:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட பிரசார கூட்டம் நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் 7 தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பிரசார கூட்டம் இரவு 10 மணிக்கும் மேல் கூடுதலாக 10 நிமிடங்கள் நடைபெற்றதாக நிலை கண்காணிப்புக்குழு அதிகாரி மோகன்ராஜ் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 7 போ் உள்ளிட்ட 450 பேர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News