செய்திகள்
ஐபிஎல் 2021

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்: ஆட்சேபனை தெரிவிக்கும் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள்

Published On 2021-02-28 17:43 GMT   |   Update On 2021-02-28 17:43 GMT
சென்னை, பெங்களூரு. அகமதாபாத் உள்பட ஆறு இடங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதால் மூன்று அணிகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஒவ்வொரு மைதானத்தை சொந்த மைதானமக கொண்டுள்ளது. சொந்த மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளி மைதானத்தில் ஏழு போட்டிகளிலும் விளையாடும்.

கொரோனா காலம் என்பதால் கொல்கத்தால், சென்னை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய ஐந்து இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளது. வாய்ப்ப இருந்தால் மும்பை வான்கடே.

அமகதாபாத் எந்த அணிக்கும் சொந்த மைதானம் கிடையாது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

‘‘நாங்கள் மூன்று அணிகள் மோசமாக பாதிக்கப்படுவோம். சொந்த மைதானத்தில் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சொந்த மைதானத்தில் ஐந்து அல்லது ஆறில் வெற்றி பெற்று, வெளியில் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு சொந்த மைதானம் கூடுதல் அனுகூலமாக இருக்கும். நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெளியில் சென்று விளையாட வேண்டியுள்ளது’’ என மூன்று அணிகளில் ஒரு அணியின் அதிகாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Tags:    

Similar News