செய்திகள்
அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்

பிறந்தநாள் விழா- அண்ணா சிலைக்கு முதல்வர்-எதிர்க்கட்சி தலைவர் மரியாதை

Published On 2021-09-15 06:57 GMT   |   Update On 2021-09-15 06:57 GMT
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை:

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதிலும் உள்ள அண்ணா சிலைகளுக்கு மரியாதை செய்யப்படுகிறது. மேலும் அண்ணாவின் திருவுருவப்படங்களுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். 

சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். 



இதேபோல் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு தலைவர்களும் அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

‘அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!’ என மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News