உள்ளூர் செய்திகள்
சேலத்தில் வாலிபர் மீது தாக்குதல் - 2 பேர் கைது
சேலத்தில் சம்பள பணம் கேட்ட வாலிபர் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் வல்லரசு. இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் வல்லரசு. இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
ஜெயக்குமாரின் சம்பள பணத்தையும் வல்லரசு வாங்கிகொண்டு, அந்த பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதை அறிந்த ஜெயக்குமார், வல்லரவிடம் சம்பள பணத்தை கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் வல்லரசு மற்றும் இவரது நண்பர்கள் ஹரிஹரன், சஞ்சய் ஆகியோர் ஜெயக்குமாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஜெயக்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன், சஞ்சய் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய வல்லரசுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன், சஞ்சய் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய வல்லரசுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.