செய்திகள்
தற்கொலை

வாலாஜா அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2021-06-16 11:43 GMT   |   Update On 2021-06-16 11:43 GMT
வாலாஜா அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

வாலாஜாவை அடுத்த பெரிய தகரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மகள் நிஷாந்தி (வயது 17) இவர் கடந்த 11-ந் தேதி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். வேலைக்கு செல்லாமலும், வீட்டு வேலையும் செய்யாமல் இருப்பதால் குடும்பத்தினர் கண்டித்ததாக தெரிய வருகிறது. இதனால் நிஷாந்தி வீட்டில் வைத்திருந்த விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட பெற்றோர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிஷாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News