உள்ளூர் செய்திகள்
கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் புதூர்காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (26). இவர் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று இரவு தன்னை யாரோ அழைப்பதாக அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கூறி கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பொது கிணற்றில் லோகநாதன் திடீரென குதித்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்புத் வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது லோகநாதன் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல் கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.