செய்திகள்
தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கோவில்பட்டி:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.