ஆன்மிகம்
குருசுமலை திருப்பயண திருவிழா

குருசுமலை திருப்பயண திருவிழாவில் ஏராளமானோர் மலை ஏறி சென்று வழிபட்டனர்

Published On 2021-03-22 04:43 GMT   |   Update On 2021-03-22 04:43 GMT
தமிழக-கேரள எல்லையில் உள்ள குருசுமலை திருப்பயண திருவிழா நிறைவடைந்தது. விழாவையொட்டி ஏராளமானோர் மலை ஏறி சென்று வழிபட்டனர்.
தமிழக-கேரள எல்லை பத்துகாணியில் கொண்டகட்டி மலையில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருப்பயண திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெய்யாற்றங்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் கொடி ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்.

தொடர்ந்து வந்த விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, பாடல் ஆராதனை போன்றவை நடந்தன. காலை 7 மணி முதல் பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று வழிப்பட்டனர்.

நிறைவு நாளான நேற்று காலை மலை அடிவாரத்தில் திருப்பலியும், காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது. இதில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கினார். மாலை 4 மணிக்கு மலை உச்சியில் திருவிழா நிறைவு கூட்டு திருப்பலி நடைபெற்றது. மேலும் மலை அடிவாரத்தில் குருசுமலை அதிபர் வின்சென்ட் பீட்டர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News