செய்திகள்
பள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தற்கொலை
பள்ளிபாளையம் அருகே தறித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 45). தறித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணம் ஆன இவர் தற்போது தனியாக வசித்து வந்ததாகவும்,
இதனால் அவர் சமீபகாலமாக மன வேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சகாதேவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி உத்தரவுப்படி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யாகண்ணு மற்றும் போலீசார் சகாதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 45). தறித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணம் ஆன இவர் தற்போது தனியாக வசித்து வந்ததாகவும்,
இதனால் அவர் சமீபகாலமாக மன வேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சகாதேவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி உத்தரவுப்படி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யாகண்ணு மற்றும் போலீசார் சகாதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.