செய்திகள்
திருட்டு

கச்சிராயப்பாளையம் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

Published On 2021-06-18 11:06 GMT   |   Update On 2021-06-18 11:06 GMT
கச்சிராயப்பாளையம் அருகே ஆடு திருடிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
கச்சிராயப்பாளையம்:

கச்சிராயப்பாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். சம்பவத்தன்று இரவு இவருக்கு சொந்தமான 3 ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, வினோத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆடுகளை திருடியது கரடிசித்தூர் கிராமத்தை சார்ந்த ராகுல் (வயது 21), விக்ரம் (21 ) மற்றும் 18 வயதுடைய இளைஞர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News