ஆன்மிகம்
திருநீற்றால் மூன்றுபட்டை இட்டுக் கொள்வதற்கு காரணம்

நெந்றியில் திருநீற்றால் மூன்றுபட்டை இட்டுக் கொள்வதற்கு காரணம்

Published On 2021-02-02 08:57 GMT   |   Update On 2021-02-02 08:57 GMT
ஆலயங்களில் இறைவனை வணங்கிய பிறகு திருநீற்று பிரசாதத்தைப் பெற்று மூன்று விரல்களால் பட்டையாக பூசிக்கொள்வதை அனைவரும் பார்த்திருப்போம். இப்படி மூன்று பட்டைகளை இட்டுக் கொள்வதற்கு ஒரு காரணம் உள்ளதாக சொல்கிறார்கள்.
ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் பக்தர்கள் சிலர், இறைவனை வணங்கிய பிறகு திருநீற்று பிரசாதத்தைப் பெற்று மூன்று விரல்களால் பட்டையாக பூசிக்கொள்வதை அனைவரும் பார்த்திருப்போம். அல்லது நாமே கூட அதைச் செய்திருப்போம். இப்படி மூன்று பட்டைகளை இட்டுக் கொள்வதற்கு ஒரு காரணம் உள்ளதாக சொல்கிறார்கள்.

மூன்று பட்டையாக திருநீற்றை பூசுவதற்கு பயன்படுத்தும் மூன்று விரல்களும் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக சொல்லப்படுகிறது. இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ‘ரிக் வேதம்’, நடுவிரலால் இடப்படும் கோடு ‘யஜூர் வேதம்’, மோதிர விரலால் இடப்படும் கோடு ‘சாமவேதம்’ ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது.

இந்த மூன்று பட்டைகளும் வேதங்களை மட்டுமின்றி இன்னும் சிலவற்றை குறிப்பதாகவும் சொல்கிறார்கள். அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

* பிரம்மா, விஷ்ணு, சிவன்,

* சிவன், சக்தி, ஸ்கந்தர்

* அறம், பொருள், இன்பம்

* குரு, லிங்கம், சங்கமம்

* படைத்தல், காத்தல், அழித்தல்.
Tags:    

Similar News